27.02.2023 அன்று சென்னை வந்திருந்த மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு.ஜகதீப் தன்கர் அவர்களை, தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களுடன் விமான நிலையம் சென்று வரவேற்றபோது.

தந்தை பெரியார் அவர்களின் 49வது நினைவு நாளான 24.12.2022 அன்று, சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் மலர்தூவி மரியாதை செலுத்தியபோது.

தி.மு.கவின் 15வது பொதுத்தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள
பொருளாளர் பொறுப்பிற்காக வேட்பு மனுவினை தலைமைக் கழகத்தில் தாக்கல் செய்தபோது

02.09.2022 அன்று காலை திருப்பெரும்புதூர் மற்றும் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வரதராஜபுரம், டி.டி.கே.நகர், இரும்புலியூர், அருள் நகர், முடிச்சூர், கிருஷ்ணா நகர், செம்பாக்கம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறை மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், மழைக் காலங்களுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதித்தபோது

19.08.2022 அன்று சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற AIRPORT ADVISORY COMMITTEE கூட்டத்தில் கலந்து கொண்டு, சென்னை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களை 26.07.2022 அன்று சந்தித்து, சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கியபோது.